search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி"

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் முத்துபாண்டி (வயது 20) இவரது நண்பர்கள் ஆனந்த் (21), கோபால்(20).

    இவர்கள் 3 பேரும் கடந்த 17-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கொன்னைப்பட்டிக்கு  சென்றனர்.  பொன்னமராவதி - புதுக் கோட்டை சாலையில் பொன்னமராவதி கொப்பனாபட்டி  அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் அருகே உள்ளே வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். ஆனந்த், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×